MCC தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை-பந்துல

245 0
சிறிலங்கா அரசாங்கம் MCC ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாராக இருப்பதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.