அம்பாறையில் மினி சூறாவளி

249 0

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வீசிய மழையுடனான மினி சூறாவளி காரணமாக திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் சந்தியில் அமைந்துள்ள வீடு மற்றும் வர்த்த நிலையம் என்பன முற்றாக சேதமடைந்துள்ளன.

திடீர் அனர்தம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. மழையுடன் வீசிய பலத்த காற்றின் காரணமாக வீடும் வர்த்தக நிலையமும் முற்றாக சேதடைந்துள்ளதாக உரிமையாளர் பாலசுந்தரம் பத்மா தெரிவித்துள்ளார். இவ் அனர்த்தம் ஏற்பட்ட வேளை கடைக்குள் தேனீர் அருந்துவதற்காக பலர் இருந்ததாகவும் திடீர் என பாரிய சத்தத்துடன் கடையில் மற்றும் அதனோடு இணைந்து அமைந்துள்ள தனது வீட்டின் கூரையின் சீற் அனைத்தும் தூக்கி பிரதான வீதியில் வீசப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தின் போது யாருக்கும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாது தெய்வாதினமாக தப்பித்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தனர். இவ்வாறு மினி சூறாவளி அனர்த்தம் காரணமாக வீடும் வர்த்தக நிலையமும் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் இவ் அனர்த்தம் தொடர்பாக அப்பகுதி கிராம உத்தியோகத்தர் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்கும் தகவல் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.