யாழ் மாநகரசபை தீயணைப்பு வீரரின் இறுதி அஞ்சலி!

250 0

யாழ் மாநகரசபை தீயணைப்பு வீரர் அ.சகாயராசாவின் இறுதி அஞ்சலிக்கூட்ட நிகழ்வு இன்று யாழ் மாநகர தீயணைப்புப்படைப்பிரிவில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இவ் அஞ்சலி பிரதம உரையினை யாழ் மாநகர சபையின் பதில் முதல்வர் து.ஈசன் நிகழ்த்தினார். தொடர்ந்து சிறப்புரைகளும் இடம்பெற்றன. இவ் அஞ்சலி கூட்டத்தில் யாழ் மாநகர சபையின் உறுப்பினர்கள் , விடுமுறையில் உள்ள முதல்வர் இமானுவேல் ஆனோல்ட், மாநகர சபையின் நிர்வாக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், தீயணைப்படை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலியினை செலுத்தினர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்.மாநகர சபையில் இருந்து பருத்தித்துறைக்குச் சென்ற தீயணைப்பு வாகனம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது.

நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு முன்பாகவே இவ்விபத்து நடந்துள்ளது. வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த குறித்த தீயணைப்பு வாகனத்தின் முன் பகுதி டயர் திடீரென காற்றுப் போன காரணத்தினால் வாகனம் வீதியை விட்டு விலகி தோட்டத்திற்குள் பாய்ந்தது.

இச் சம்பவத்தில் தீயணைப்பு பணியில் ஈடுபடுபவர் ஒருவர் படுகாயமடைந்து மயக்கமடைந்த நிலையில் நோயாளிகள் காவு வண்டியின் உதவியுடன் வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் இறுதிக் கிரியைகளே இன்றைய தினம் மாநகரசபையில் இடம் பெற்றது.