சிறீலங்காவில் மீண்டும் இனவாத உணர்வுகள் தீவிரமடையத் தொடங்கியுள்ளமை தொடர்பாக சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
இதனைக் கட்டுப்படுத்த சிறீலங்கா அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அண்மைய நாட்களில் நாங்கள் அவதானிக்ககூடியதாகவுள்ள ஆபத்தான உரைகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் அதிகாரிகளுக்குள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவுக்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்றவற்றுக்காக தன்னை அர்ப்பணித்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமில்லை எனவும் கூறியுள்ளார்.
உலகின் பல பகுதிகளில் பகைமைப் பேச்சு மற்றும் சகிப்புத்தன்மையின்மை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்த அவர் அரசுகள் அனைத்தும் மக்களும், மனித உரிமைகளை அனுபவிப்பதற்கு உள்ள உரிமை குறித்து தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.