யாழில் காவல்துறையினர்மீது மிளகாய்ப்பொடி வீச்சுத் தாக்குதல்!

315 0

img_0392யாழ்ப்பாணம் துன்னாலை வடக்குப் பகுதியில் காவலரணில் காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது நேற்று நள்ளிரவு மிளகாய்ப்பொடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்களைப் பறிக்கும் முயற்சியும் நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, குறித்த பகுதியூடாக மண் கடத்தல் இடம்பெறுவதையடுத்து, கெட்டிசந்தி பகுதியில் காவல்துறை காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பகல் கடமைக்கு 5 பேரும், இரவுக் கடமைக்கு 5 பேரும் குறித்த காவலரணில் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரவு 12 மணியளவில் நடந்து வந்த குழுவொன்று கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினருக்கு மிளகாய்ப் பொடியை வீசிவிட்டு அவரிடமிருந்து ரி-56 துப்பாக்கியைப் பறிக்க முற்பட்டனர்.

தூக்கத்தில் இருந்த ஏனைய காவல்துறையினர் விழித்துக்கொண்டதையடுத்து ஆயுதங்களைப் பறிக்க வந்த கொள்ளையர்கள் காட்டுப் பகுதியினூடாகத் தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையை காங்கேசன்துறைக் காவல்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.