வற்றாப்பளை கண்ணகை அம்மனில் அன்று குண்டுகளை வீசியவர்கள்…இன்று

247 0

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் விசியுள்ளனர்.

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று (8) அதிகாலை சிறப்புற ஆரம்பமானது.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆலய உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் ஆலய வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாது என குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் ஆலயத்துக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்கள் ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந்த நிலையிலேயே வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு உலங்குவானூர்தி மூலம் விமானப்படையினர் மலர் தூவியுள்ளனர்.