வடக்கில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு முடிவு!

279 0

steel-house-1வடமாகாணத்தில் 22 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். வடமாகாணத்திலிருந்து 97 ஆயிரம் பொதுமக்கள் பொருத்து வீடுகளுக்கான கோரிக்கையை முன்வைத்து கடிதம் மூலம் தனக்கு அறிவித்தமையை அடுத்தே 22 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், வீடொன்றுக்கான செலவீனம் 16 இலட்சம் ரூபாவாக மதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.