இராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படையினர்

383 0

19cd337af1d86120e0ad8982a7fa56f6கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடந்த சனிக்கிழமை காலை விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றிருந்தனர்.

இவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் படகுகளை சுற்றி வளைத்து வலைகளை வெட்டி வீசியுள்ளனர்.

பின்னர் படகுகள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர்.

அத்துடன் மீனவரொருவரின் படகு மீது கப்பலால் மோதி இனிமேல் இப்பகுதிக்கு வரக்கூடாது என எச்சரித்து மீனவர்களை விரட்டியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.