கண்டி கொலை – 6 காவல்துறை குழுக்கள் நியமனம்

291 0

news_06-01-2016_89voleurகண்டி அங்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 6 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் கொலையுடன் தொடர்புடைய இருவரை கைது செய்ய விசேட தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 8.40 அளவில் கண்டி அங்கும்புர பகுதியில் இருந்த இருவர் மீது உந்துருளியில் வந்தவர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

சம்பவத்தில் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கண்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருககின்றார்.

இந்தநிலையில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.