162.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி

266 0

31341779imfஇலங்கைக்கு 162.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கான, சர்வதேச நாணய நிதிய இணக்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கும் இரண்டாவது கட்ட தவணைக் கடன் இதுவாகும்.

அதன்படி இதுவரை 325.1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை கடனாக சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க அனுமதித்துள்ளது.