சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் தொடர்பான புதிய அறிவிப்பு

300 0

சிறிலங்கா முழுவதும் எதிர்வரும் 31ஆம் திகதி  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

ஊரடங்கு சட்ட அமுலாக்கம் குறித்த புதிய அறிவிப்பினை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

அதனைத்தொடர்ந்து, எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி திங்கட்கிழமை முதல் ஜுன் 3ஆம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் மறுதினம் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்பின்னர் ஜுன் 4ஆம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் மீண்டும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜுன் 6ஆம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ச்சியாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.