சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி

253 0

சொத்து வரியை இரண்டு வருடங்களுக்கு அதிகரிக்காமலிருக்க சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு தற்போது இடம்பெற்று வருகிறது.

இதில் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் பந்துல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பாக சகல ஆளுநருக்கும் அறிவிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன இதன்போது தெரிவித்துள்ளார்.