யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

270 0

யாழ். – மருதனார்மடம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (புதன்கிழமை)இடம்பெற்றது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான எஸ்.தனுஜனின் தந்தையான எஸ்.சிவானந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.