புதிய அரசியலமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்புக்கு ஜாதிக ஹெல உறுமய எதிப்பு!

277 0

pic-1-jpgபுதிய அரசியலமைப்புக் குறித்து கருத்து வாக்கெடுப்பு நடாத்துவதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியான ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு குறித்து கருத்து வாக்கெடுப்பு நடாத்தத் தேவையில்லை. ஆனால், நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனேயே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும்.

அரசியல் சார்பு மற்றும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஏனைய காரணிகளால் கருத்து வாக்கெடுப்பு மக்களின் கருத்தைப் பிரதிபலிக்காது. பிரித்தானியாவில் நடத்தப்பட்ட, பிரெக்சிட் கருத்து வாக்கெடுப்பு இதற்கு ஒரு உதாரணம்.இந்த வாக்கெடுப்பினால் அரசியல் மற்றும் பொருளாதார தளம்பல் நிலை மற்றும் பிளவுகள் போன்ற தேவையற்ற பிரச்சனைகள் பிரித்தானியாவில் ஏற்பட்டன.

நாம் கருத்து வாக்கெடுப்பு நடத்தினாலும் அதேபோன்ற பிரச்சனையை எதிர்கொள்ளநேரிடும்.வடக்கு மாகாண முதலமைசர் சி.வி.விக்னேஸ்வரன் தனது பிரிவினை அரசியல் பரப்புரைக்கு இதனைச் சாதகமாகப் பயன்படுத்தக்கூடும்.

மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது ஊழல் கூட்டாளிகள் இதனைத் தமது வங்குரோத்து பரப்புரைக்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.முன்னர் சிறீமாவோ பண்டாரநாயக்காவும், ஜேஆர் ஜெயவர்த்தனவும் கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல், நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் கொண்டே புதிய அரசியலமைப்புக்களை நடைமுறைப்படுத்தினார்கள்.

இப்போது எல்லாக் கட்சிகளும் புதிய அரசியலமைப்புத் தேவையென்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எல்லாக் கட்சிகளும் தமது யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளன. எனவே அனைவரதும் ஒருமித்த ஆதரவுடன் இதனை நிறைவேற்றவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.