பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்ற நால்வர் ;கைது!

286 0

நெல்லியடி பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு சென்றனர் எனும் குற்றசாட்டில் நால்வர் ;கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லியடி போலீசார் தமது ;பொலிஸ் ;பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ;நேற்றைய தினம் புதன்கிழமை விசேட வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். அதன் போது நான்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அனுமதி பத்திரமின்றி ;பெருமளவான ;மதுபான போத்தல்களை கொண்டு சென்ற ;நால்வரை ;கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து பலரும் முண்டியடித்து வரிசையில் நின்று மதுபானத்தை கொள்வனவு செய்திருந்தனர். சிலர் அளவுக்கு அதிகமாக கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.