மதுபான கொள்வனவாளர்களுக்கு எச்சரிக்கை

299 0

மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில், இன்று (14) முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மதுபானசாலைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானசாலைகளுக்கு முன்பாக அதிகமானோர் ஒன்றுக்கூடியதை காணக்கிடைத்ததாகவும் சமூக இடைவெளியை மறந்து  மக்கள் செயற்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, அவதானத்துடன் செயற்படாவிட்டால் திறக்கப்பட்ட மதுபானசாலைகளை மீண்டும் மூட வேண்டி ஏற்படுமென, பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.