ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்

302 0

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

14 நாட்களுக்கு நிறைவடைந்ததும் இவர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர், சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படுதவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.