இயல்பு நிலைக்கு திரும்பியது யாழ் மாவட்டம்

307 0

நாட்டில் நிலவிவரும் கொரோனா பேரிடர் காரணமாக முடக்கப்பட்டிருந்த அனைத்து நடவடிக்கைகளும் இன்று (11) அதிகாலை 5 மணி முதல் 23 மாவட்டங்களில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பின்னர் இரு வாரங்களாக ஊரடங்கு நீக்கப்பட்டு மீண்டும் அமல்படுத்தப்பட்டு வந்த யாழ் மாவட்டத்தின் இயல்புநிலை இன்று காலை முதல் வழமைக்கு திரும்பி இருப்பதாக ‘உதயன்’ செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நகரப்பகுதிகளில் மக்கள் தமது வழமையான செயற்பாடுகளில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.