சிறிலங்கா இராணுவத்தால் தாக்கபட்ட மக்களை சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி!

270 0

நேற்று முன் தினம் (8) இரவு வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த இராணுவத்தினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி, தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி நடராஜர் கண்டீபன் ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேற்று நேரடியாக சென்று ஆராய்ந்தனர்.