போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

263 0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் போதை மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய ஓட்டமாவடி பிரதேசத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து மூன்று சந்தேக நபர்களும் 149 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேசத்தில் வியாபாரத்திற்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் 21 வயதுடைய இளைஞனிடம் இருந்து ஒன்பது மாத்திரைகளும், அத்தோடு இரண்டு சந்தேக நபர்களிடம் இருந்து 130 போதை மாத்திரைகளும், சந்தேக நபர் ஒருவரின் வீட்டில் இருந்து பத்து போதை மாத்திரைகளுமாக 149 மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. (150)