கைத்தறி உற்பத்தி இயந்திம் இனம்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பு!

273 0

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் நேற்று நெசவு கைத்தறி உற்பத்தி இயந்திரத்துக்கு இனம்தெரியாத சில நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டுள்ள வீட்டு உரிமையாளர் கருத்து தெரிவிக்கும் போது:-சம்பவம் நடைபெற்ற தினமான நேற்று பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தது.

மாலை 5.30 மணியளவில் நோன்பு திறப்பதற்கு தயாரான நேரத்தில் இந்த நாசகார செயல் இடபெற்றுள்ளது.இதனால் எமது ஜீவனோபாய தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.