சிறப்பு சலுகைகளைப் பெற சபாநாயகர் தரப்பு எதிர்பார்க்கவில்லை

284 0

சபாநாயகர் கருஜயசூரியவால் தமக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகப்பூர்வ வாகனங்கள், அலுவலகம், வீடு உள்ளிட்ட அனைத்து விடயங்களும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட உடனே, மீண்டும் கையளித்துள்ளதாக, சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் மார்ச் மாதம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ள அமைச்சரவைப் பத்திரத்தில், முன்னாள் சபாநாயகர் உள்ளிட்ட தரப்பினர் சிலருக்கு உத்தியோகப்பூர்வ வாகனம், வீடுகளை, தேர்தல் நிறைவடையும் வரை பயன்படுத்த முறையொன்றை தயாரிக்கப்பட்டுள்ளதாக, ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அமைய கிடைக்கவுள்ள சிறப்பு சலுகைகளை எந்தவொரு விதத்தில் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கவில்லை என சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.