கொரோனா வைரஸ்- சென்னையில் மேலும் 2 பேர் உயிரிழப்பு

280 0

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இன்று பலியாகினர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 6009 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சென்னையில் மட்டம் 3043 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 40 பேர் பலியாகியிருந்தனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயது மூதாட்டியும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 56 வயது பெண்ணும் இன்று உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 42 ஆக உயர்ந்துள்ளது.