சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட அறுவர் கைது

304 0

474367276fisherமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் வாவிப்பகுதியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த ஆறு பேரை இன்று வியாக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து பெருமளவு சட்டவிரோத வலைகளையும் மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வாவிப்பகுதியில் சட்ட விரோத வலைகள் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் இவர்களை கைதுசெய்துள்ளனர்.

இவர்களிடம் இருந்து சுமார் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான சட்ட விரோத வலைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சுமார் 50கிலோ மீன்களும் மீட்கப்பட்டதாக திணைக்களத்தின் பரிசோதகர் த.பாலமுகுந்தன் தெரிவித்தார்.

கடற்பகுதிகளில் பயன்படுத்தும் வலைகள் சட்ட விரோதமான முறையில் வாவிகளுக்குள் பாவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவர்களை இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவியில் சட்ட விரோத வலைகளைப்பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவோர் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மாவட்ட கடற்றொழில் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.