சென்னையில் விஐபி பாதுகாப்பு பிரிவு பெண் காவலருக்கு கொரோனா

353 0

சென்னையில் முதல்வர் இல்லம் மற்றும் வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும், காவல் பிரிவை சேர்ந்த 44 வயதான பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்த படி உள்ள நிலையில் சென்னையில் நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் முதல்வர் இல்லம் மற்றும் வி.ஐ.பி.களுக்கு பாதுகாப்பு வழங்கும், காவல் பிரிவை சேர்ந்த 44 வயதான பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன், விடுமுறையில் சென்ற அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருடன் பணியாற்றிய காவலர்களுக்கு பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.