மாமனிதர் சிவராமிற்கு வவுனியாவில் நினைவஞ்சலி!

285 0

கடந்த ;28 ஏப்ரல் 2005 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் அரசியல் ஆய்வாளருமாகிய தர்மரத்தினம் சிவராம் (மாமனிதர் தராகி) அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவஞ்சலி வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியாவில் ஆயிரத்து நூற்று ஐம்பது நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை, தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர்.

ஏ9 வீதிக்கு அருகே அமையப்பெற்றுள்ள தமது போராட்டப் பந்தலில் இன்று (29.04) புதன்கிழமை 1167 ஆவது போராட்ட நாளில், மாமனிதர் தராகியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தி மெழுகுவர்த்திகள் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.