பாதிக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை

324 0
சிறிலங்காவில் கொரோனா வைரசு தொற்று நிலைமையடுத்து பாதிக்கப்பட்டுள்ள தனியார் துறை வர்த்தக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள தொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்காக துரிதமாக பதிலளிக்குமாறு வர்த்தக சமூகத்தினரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்று தொழில் திணைக்களம் ணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

https://forms.gle/pE64ygeuHrK7TZcH9 என்ற இணையதளத்தின் இல் பிரவேசித்து நேரடி ஆய்வுக்கு பங்களிப்பு செய்ய முடியும்.

இதற்கு மேலதிகமாக தொழில் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.labourdept.gov.lk என்ற இணையதளத்தின் மூலம் கணக்கெடுப்புக்கான தகவல்களை வழங்க முடியும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.