குளிர்சாதனப் பெட்டி திருத்த வந்து…. திருட்டு!

298 0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவு, மீராவோடையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

வர்த்தக நிலைய உரிமையாளர் தன்னுடைய குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்துள்ள சம்பவத்தை கடைக்கு வந்த நபர்களிடம் கூறியுள்ளார்.

அதை ஏதோவொரு வகையில் அறிந்து கொண்ட நபரொருவர் குளிர்சாதனப் பெட்டி திருத்துனர் போன்று வருகை தந்து பணத்தோடு இருந்த தேசிய அடையாள அட்டை, வாக்காளர் இடாப்பு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார்.

குறித்த நபர் முகக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்ததாக பாதிக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பொலிஸார் சம்பவம் நடந்த வர்த்தக நிலையத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.