சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 557 ஆக அதிகரிப்பு

427 0

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்று 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 126 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் 7 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.