கொழும்பு நோக்கி ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவர் தலவாக்கலையில் கைது!

350 0

சிறிலங்காவில் ஊரடங்கு வேளையில் இறைச்சிக்காக ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவரை தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சிறியரக லொறியொன்றில் 5 ஆடுகள் சகிதம் இவர்கள் பயணித்தபோது தலவாக்கலை நகரில் வைத்து இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதி பத்திரம் இன்மை, ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதான இவர்கள், நுவரெலியா நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரில் இருவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றையவர் கொட்டகலைப் பகுதியை சேர்ந்தவரென்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.