சிறிலங்காவில் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்

338 0

சிறிலங்காவில் நாளை (27)  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விடுமுறையில் சென்றுள்ள சிறிலங்காபாதுகாப்புப் படையினர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் 28ம் திகதி காலை 5 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் எனவும் சிறிலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.