மட்டு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக உலருணவு வழங்கல்!

335 0

கொராேனா அச்சுறுத்தல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ள நிலையில் ஈரளகுளம் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண பொதிகள் மட்டு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது 32 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் பெறுமதியான நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிவாரணம் வழங்குவதற்கான நிதி உதவிகளை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த வல்வை 21 நண்பர்கள் அமைப்பினர் வழங்கியிருந்தனர்.