சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் முறையான போக்குவரத்து சேவைகள்

302 0

சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக முறையான போக்குவரத்து சேவைகளை வழங்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

சேவைகளை ஆரம்பிக்க விரும்பும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் ஒவ்வொரு வழியிலும் பயணிக்க எதிர்பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் நிறுவனங்களின் தகவல்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்க முடியும்.

அதன்படி, இலங்கை போக்குவரத்து சபை எதிர்வரும் 28 ஆம் திகதி மேற்குறித்த தகவல்களை dgmoperation@sltb.lk என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளது.