4 மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிப்பு

290 0

கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் மே மாதம் நான்காம் திகதி காலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கான ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் மே மாதம் முதலாம் திகதி வரை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.