இரத்தினபுரியில் 3 கடற்படை சிப்பாய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்

282 0

விடுமுறையைக் கழிப்பதற்காக வெலிசற கடற்படை முகாமிலிருந்து இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 3 பிரதேசங்களுக்குச்  சென்ற,  கடற்படை சிப்பாய்கள் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் 13 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, இரத்தினபுரி மாவட்ட சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பொலிஸார் நால்வரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.