இனவாதம் பேசிய பிக்குவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை?

279 0

download-3மட்டக்களப்பில் பௌத்த பிக்கு ஒருவர் தமிழ் அரச அதிகாரி ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், இனவாத ரீதியான கருத்துக்களை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மட்டக்களப்பு காவற்துறையினருக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனவாத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் அனுமதிவழங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.