சிறிலங்காவில் ஹெரோயின் வியாபாரிகள் மூவர் கைது

344 0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குபட்ட வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும், ஹெரோயின் போதைப் பொருட்களும் திங்கட்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தவலையடுத்து ரிதிதென்னை, பிறைந்துறைச்சேனை, மாஞ்சோலை பதுறியாநகர் ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது ஹெரோயின் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்;.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் மூன்று சந்தேக நபர்களை வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்தவகையில் ரிதிதென்னை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் இருந்து ஏழு மில்லி கிராம் ஹெரோயினும், பிறைந்துறைச்சேனை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் இருந்து ஐந்து மில்லி கிராம் ஹெரோயினும், மாஞ்சோலை பதுறியாநகர் பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் இருந்து ஐந்து மில்லி கிராம் ஹெரோயின் அடங்கலாக மூவரிடம் இருந்து பதினேழு மில்லி கிராம ஹெரோயின் போதைப் பொருட்களை வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களுடன் இன்னும் பல போதைப் பொருள் வியாபாரிகள் தொடர்புகளுடன் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  மேலும் தெரிவித்தார்.