தென் தமிழீழம் அம்பாறையில் ஊரடங்கை தளர்த்தினாலும் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றவும்!

380 0

அம்பாறை மாவட்டத்தில்  ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பது போன்று இறுக்கமான நடைமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர அலுவலகம் ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (19) நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போதே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பானர் இவ்வாறு தெரிவித்தார்.