பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை கடந்தது

302 0

பாகிஸ்தானில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசின் பிடியில் சிக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்து உள்ளது.உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் இந்த வைரசின் பிடியில் சிக்கி வருகின்றனர். நேற்று முன்தினம் வரை 7,638 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை தற்போது 8 ஆயிரத்தை கடந்து உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 48 பேர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் சுமார் 40 ஆயிரம் பாகிஸ்தானியர்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.