பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 7,500-ஐ கடந்தது

377 0

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அங்கு 7,500-ஐ கடந்து உள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் போதிலும் கொரோனா தனது ஆட்டத்தை தொடர்ந்து காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக அங்கு மசூதிகளில் ஒன்று கூடுபவர்களை தடுத்து நிறுத்த அரசு போராடி வருகிறது.
புதிதாக 400-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அங்கு 7,500-ஐ கடந்து உள்ளது. மேலும் அங்கு கொரோனா வைரஸ் 140-க்கும் அதிகமானோரின் உயிரை பலி வாங்கி இருக்கிறது.