அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் – தமிழக அரசு

527 0

அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அரசின் ஊரடங்கு உத்தரவு, மக்கள் ஒத்துழைப்பு ஆகியவற்றால் கொரோனா பரவல் பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இதற்கிடையே, பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், ஏப்ரல் 20-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். அதன்பின் தளர்வுகள் இருக்கும். ஏப்ரல் 20-ம் தேதிக்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதிவிலக்குகள் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 507 பேர் பலியாகி உள்ளனர்.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15,712 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் நாளை முதல் அமலாக உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக தமிழக அரசின் சிறப்பு குழு ஆலோசனை நடத்தியது. இந்த குழுவின் ஆலோசனைகள் முதலமைச்சர் பழனிசாமியிடம் நாளை தெரிவிக்கப்படும். குழுவின் ஆலோசனைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப முதலமைச்சர் முடிவெடுக்க உள்ளார்.
அதனால், அடுத்த உத்தரவு வெளியாகும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்துள்ளது.