கொரோனா பரிசோதனை கருவிகளின் விலை என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி

504 0

கொரோனா பரிசோதனை கருவிகளின் விலை என்ன? என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், கொரோனா தொற்றுநோய் பரிசோதனை கருவிகள் எவ்வளவு எண்ணிக்கையில், என்ன விலைக்கு வாங்கப்பட்டன? என்பதை தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, நேற்று அவர், தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக் கருவி தனது மாநிலத்துக்கு எத்தனை வாங்கப்பட்டன? என்ன விலைக்கு வாங்கப்பட்டன? எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டது? என்பதை சத்தீஸ்கார் மாநில மந்திரி வெளிப்படையாக அறிவித்துள்ளார். அதேபோல் தமிழக அரசும் எவ்வளவு கருவிகள், என்ன விலைக்கு வாங்கப்பட்டுள்ளன? என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

நாடே உயிர் காக்கப் போராடிவரும் இந்த நேரத்தில், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.