வட தமிழீழம் யாழில் பொது நிர்வாக அலுவலக வளாகங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கை!

342 0

வட தமிழீழத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி இன்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில், யாழில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில்  கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், சிறிலங்கா பொலிஸார் உள்ளிட்டோர் இந்தப் பணியை வடக்கிலும் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றும் யாழ்ப்பாணத்தில் குறித்த குழு தொற்றுநீக்கல் நடவடிக்கையை முன்னெடுத்தது.