சிறிலங்காவின் வெள்ளவத்தை பகுதியில் கத்திக்குத்து!!

335 0

சிறிலங்காவின் வெள்ளவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் குறித்த விசாரணைகளை சிறிலங்கா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மற்றைய நபரை கத்தியால் குத்தியுள்ளார். இதன் பின்னர் காயமடைந்த குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் வெள்ளவத்தை ஸ்வர்ணா வீதியில் வசிக்கும் 34 வயதுடைய நபர் என்றும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த சிறிலங்கா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.