கொரோனா நெருக்கடிக்கான நிவாரண உதவி! கிளிநொச்சி மக்களுக்கு நோர்வே தமிழர்!

361 0

இன்று(17,04,2020) நோர்வே தமிழ்மக்களின் உதவியுடன் ஜெயபுரம் கிராமசேவையாளருக்குட்பட்ட ஊற்றுப்புல கிராமத்தில் வசிக்கும் 60 குடும்பங்குளுக்கு நோர்வே தமிழ் ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தினால் கொரோனா நெருக்கடிக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது.

ஒருநேர உணவை உண்பதற்கே மிகவும் கடினப்பட்டுக்கொண்டிருக்கும் எமது சொந்தங்களுக்கு தலா 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த உதவிகளை பெற்றுக்கொண்ட மக்கள் நோர்வே வாழ் தமிழ் மக்களுக்கு கடிதமூலம் தமது அன்பை பகிர்ந்து கொண்டுள்ளார்கள் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.