சென்னையில் கொரோனா பாதிப்பை அதிகம் சந்தித்துள்ள ராயபுரம்

277 0

சென்னையில் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் அதிக பாதிப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில்  இருந்து இதுவரை 50 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 199 பேருக்கும், கோவையில் 119 பேருக்கும், ஈரோட்டில் 64 பேருக்கும், திருப்பூரில் 60  பேருக்கும், திண்டுக்கல்லில் 56 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் 199 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ராயபுரத்தில் அதிக பாதிப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

வடசென்னை பகுதியான ராயபுரத்தில், நேற்று ஒரே நாளில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 63 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திரு.வி.க.நகரில் 36 பேருக்கும், அண்ணாநகர் மற்றும் கோடம்பாக்கத்தில் தலா 22 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தண்டையார்பேட்டையில் 17 பேரும், தேனாம்பேட்டையில் 14 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருங்குடி, அடையாறில் தலா 6 பேருக்கும், வளசரவாக்கம், திருவொற்றியூர் பகுதிகளில் தலா 4 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாதவரத்தில் 3 பேருக்கும், ஆலந்தூர், சோழிங்கநல்லூரில் தலா 2 பேருக்கும் பாதிப்பு உள்ளது. மணலி, அம்பத்தூர் மண்டலங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.