எவன்ட் கார்ட் கடற்படை பொறுப்பேற்ற பின் இவ்வளவு வருமானமா?

284 0

awant-gard-shipஎவன்ட் கார்ட் கடல்சார் பாதுகாப்பு சேவையை கடற்படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து நவம்பர் 13ம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ளது.

இக்காலப் பகுதியில் 233 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டிருப்பதாக கடற்படை அறிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் 13ம் திகதி கப்பல்களுக்கான கடல்சார் பாதுகாப்பை கடற்படையினர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

ஒரு வருடத்தில் 6646 கப்பல் பயணங்களுக்கு பாதுகாப்பு வழங்கி 233 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணம் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் காலியில் அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டு அலுவலகங்களுக்கிடையில் 6646 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாதமொன்றுக்கு சராசரியாக 554 பயணங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஈட்டப்பட்ட வருமானத்தை அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்துக்கு கையளிப்பதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொள்வர்.

வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் எவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனம் அமைக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த நிறுவனத்துக்கும், கடற்படைக்குமிடையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு கடற்படையினருக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.