ஐந்து சந்தேக நபர்களை சிறிலங்கா காவல் துறையால் கைது!

488 0

அனுராதபுரம் கெபிதிக்கொல்லாவ பகுதியில் இளைஞன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து சந்தேக நபர்களை சிறிலங்கா காவல் துறையினர்  கைதுசெய்துள்ளனர்.

இக்கிரிகொல்லாவ பகுதியைச் சேர்ந்த ஒருவர நேற்றிரவு 8.30 மணியளவில் கொலை செய்யப்பட்டவர் ஆவார். கத்திக் குத்துக் காயங்களுடன் கெபிதிக்கொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் விசாரணைகளை முன்னெடுத்த சிறிலங்கா காவல் துறை  சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை கைதுசெய்துள்ளதுடன்  ;கொலை ;தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.