விபத்தில் சிறிலங்கா காவல் துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

461 0

 தென் தமிழீழம் திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறிலங்கா காவல் துறை  உத்தியோகத்தரொருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தான சிறிலங்கா காவல் துறை  நிலையத்தில் கடமையாற்றும் அதே இடத்தைச் சேர்ந்த சார்ஜன் விபுல ரத்னாயக்க (40 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடமையை முடித்துக் கொண்டு குறித்த சிறிலங்கா காவல் துறை  உத்தியோகத்தர் வீடு சென்ற போது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரவ்பத்தான சிறிலங்கா காவல் துறையினர்   மேற்கொண்டு வருகின்றனர்.