கிளிநொச்சியில் நடைபெறும் தொடர் கைதுகள்!

349 0

201607181125530509_riots-in-turkey-military-revolution-that-helped-arrest-44_secvpfயாழ். பல்கலைக்கழக மாணவா்களின் கொலையை கண்டித்து கடந்த மாதம் 25ஆம் திகதி வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நாள் கதவடைப்பு போராட்டத்தின் போது கிளிநொச்சியில் அமைதியின்மையை தோற்றுவித்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஏனையவர்களை கைது செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஊடகங்களில் வெளியான புகைப்படங்களை ஆதரமாக கொண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த கதவடைப்பு நாள் அன்று A9 வீதி மற்றும் கிளிநொச்சி புறநகர் பகுதிகளிலும் சந்திகளிலும் டயர்களை எரித்தவர்கள் மற்றும் கலகம் விளைவித்தவர்கள் என இனங்காணப்பட்டுக் கைது செய்யப்படுகின்றனர்.

இதேவேளை குறித்த தினத்தன்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக கலகத்தில் ஈடுபட்டு பொலிஸாரினைத் தாக்கிய நபரை கைது செய்து விளக்க மறியலில் வைத்து பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அத்தோடு மேலும் பலர் தேடப்பட்டும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.